நூல் ஆலைகளின் மின் கட்டணம் குறைப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை

Viduthalai
1 Min Read

சென்னை, செப்.24 மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.பருவ கால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் பளுவைக் கொண்ட தாழ்வழுத்த ஆலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்துக்கொள்ளும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அனுமதிக்கப்பட்ட மின்பளுவை குறைத்துக் கொள்ளவும் தேவைப்படும்போது உயர்த்திக் கொள் ளவும் அனுமதி வழங்கப்படும்.நூற்பாலைகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மின்கட்டண முறையை மாற்றியமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *