பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) மற்றும் ரஷ்யாவின் டான் மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் தலைமையில் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர். முனைவர் அ.ஆனந்த்ஜெரால்டு (இணைப் பேராசிரியர் சமூகப்பணித்துறை) ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். மேலும் இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றார். துணைவேந்தர் உரையாற்றும் போது இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் ஆராய்ச்சியில் சிறப்பாக வரமுடியும், மற்ற மாணவர்களுக்கும் இது ஊக்கமளிக்கும் என்றார். இதில் பல்கலைக்கழக ஆராய்ச்சி துறை இயக்குநர்கள், முதன்மையர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். (26.3.2024, வல்லம்)