டில்லியில் புதிய திருப்பம் கெஜ்ரிவால் படத்துடன் ஆம் ஆத்மி பிரச்சாரம்

viduthalai
1 Min Read

புதுடில்லி,மார்ச் 27- சமூக வலைதளப் பக்கங் களில் முகப்பு படத்தை (டிபி) மாற்றிவிட்டு ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரத் தைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் ஆதிஷி கூறிய தாவது:
தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினரால் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய் யப்பட்டுள்ளார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அர்விந்த் கெஜ்ரிவாலின் உத்வேக நிலை சென்று சேர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, சமூக வலை தளப் பக்கங்களில் முகப் புப் படத்தை மாற்றும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். நாட்டில் அரசமைப்பு சட்டம், ஜனநாயகத்தைக் காப்பாற்ற இந்த நட வடிக்கையை ஆம் ஆத்மி தொடங்கியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண் டர்கள் என பலரும் தங் களது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்பு படங்களை மாற்ற வேண் டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், இதற்கான பொதுவான படத்தையும் (காமன் டி.பி. படம்) அமைச்சர் ஆதிஷி வெளியிட்டார். சிறைக் கம்பி களுக்கு பின்னால் அர் விந்த் கெஜ்ரிவால் நிற் பதைப் போன்று அந்த டி.பி. படம் உள்ளது.
மேலும் அதில், `மோடியின் மிகப்பெரிய பயம் அர்விந்த் கெஜ்ரிவால்` என்று எழுதப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *