தூத்துக்குடி,மார்ச் 26- மக்களின் பக்கம் நின்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி., புகழாரம் சூட்டியுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து 24.3.2024 அன்று பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அப்போது பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி,
“தூத்துக்குடி என்பது எனக்கு இரண்டாவது தாய் வீடாக உணரக்கூடிய வகையில் உள்ளது. நாடும் நமது, நாற்பதும் நமது என்ற வகையில் நாம் பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியையும், ஏன் வெள்ள நிவா ரணம் கூட தராமல் வஞ்சித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பிரதமர் மோடி தற்போது அடிக்கடி தமிழ் நாட்டுக்கு வருகிறார்.
வெள்ளம் பாதித்த நேரங்களில் கூட வராத பிரதமர் தற்போது வருகிறார். வந்து திமுகவை அழித்து விடுவதாக பேசி வரு கிறார். திமுகவை யாராலும் அழிக்க முடியாது, அழித்து விடு வேன் என சொன்னவர்கள்தான் காணாமல் போய் உள்ளனர்.
திமுக ஆட்சி இந்த நாட்டுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறது. அதனால்தான் தற் போதைய இந்த தேர்தல் அறிக்கையில்கூட மகளிர் உரிமைத் தொகையை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும், அதுபோல் காலை உணவு திட்டத்தையும் நாடு முழுவதும் அமல் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்றிய பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை டீசல் விலை மற்றும் எரிவாயு விலை களை ஏற்றி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது “இந்தியா” கூட்டணி அரசு வரும்போது பெட்ரோல் விலை ரூபாய் 75, டீசல் விலை ரூபாய் 65, அதுபோல் எரிவாயு உருளை விலை ரூ.500 ஆக அனைத்தும் குறைக்கப்படும்.
மக்களை விலைவாசியிலிருந்து காப்பாற்றும் அரசாக அந்த அரசு செயல்படும்.
மக்களுக்கு எந்தவித நிதி உதவியும் செய்யாமல் அதே போல ஒரு பைசா கூட வழங்காமல் தமிழ்நாட்டிலிருந்து வரி வசூல் பண்ணி அங்கே இருக்கக்கூடிய ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்கள் நமக்கு திருப்பி கொடுப்பது 26 பைசா, ஆனால், உத்தரப் பிரதேசத்திலி ருந்து 1 ரூபா வரி கொடுத்தால் 2 ரூபாய் 2 பைசா. எந்த அளவுக்கு அவர்கள் தமிழ்நாட்டை, தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதே போல இவர்கள் கொண்டு வந்த சட்டத்திற்கு ஒன்றிய அரசுக்கு ஆதரவு கொடுத்தது அதிமுக. நாங்க இப்போது பிரிந்து நிற்கி றோம் என்றால் நம்பாதீர்கள் இரண்டு ஸ்டிக்கரும் மீண்டும் இணைந்து கொள்ளும். இங்கே இருக்கும் பெண்களின் உயர் கல்விக்காக புது மைப்பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென்ற போது, முதல மைச்சர், மக்கள் பக்கம் நின்று ஆலையை மூட நடவடிக்கை எடுத்தார்.
வரக்கூடிய இந்த தேர்தலிலே தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தி யாவிலிருந்தே பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டும். “இந்தியா” கூட்டணி இங்கு ஆட்சி அமைக்க வேண்டும்.
நம்முடைய இளைஞர்கள் கல்விக்காக வாங்கி இருக் கக் கூடிய கடன் ரத்து செய்யப்படும்.
அதுமட்டுமல்லாமல் நீங்கள் வெளியூர் போகும்போது ஒவ் வோர் இடத்திலும் சுங்கச் சாவ டியில் நிறுத்தி காசு வாங்கு கிறார்கள்; அந்த சுங்கச் சாவடியில் வாங்கக்கூடிய காசு எல்லாம் நிறுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுடைய பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின் னத்தில் அளித்து மீண்டும் உங்க ளோடு பணியாற்றக் கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளிக்க வேண்டும் என்று உங்களையெல் லாம் வேண்டி கேட்டுக் கொள் கிறேன் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் அரங்கம், மாரியம்மன் கோயில், ஜிவிசி காலனி ஜங்ஷன், காசி நாடார் ஆயில் மில், அமெரிக்கன் மருத்துவமனை அருகில், உருண் டையம்மன் கோவில் அருகே, கருப்பட்டி சொசைட்டி, பூபால் ராயபுரம், திரேஸ்புரம் ஜங்ஷன், புது தெரு, மட்டக்கடை, 2ஆம் கேட் போஸ் திடல், தேரடி, பள்ளி வாசல், றிறிவிஜி ஜங்ஷன், சுமங்கலி கல்யாண மண்டபம், பீங்கான் ஆபிஸ், பக்கில்புரம், ரிஷிறிஷி தியேட்டர், சிதம்பர நகர், பிரை யண்ட் நகர் 12ஆவது தெரு, 3ஆம் மைல், பழைய பேருந்து நிலையம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் கனிமொழி பிரச்சாரம் செய்தார்.