டில்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் வலதுசாரி சங்பரிவார் படுதோல்வி – இடது முன்னணியினர் மாபெரும் வெற்றி

1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, மார்ச் 26- “வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறு வதாக இந்த வெற்றி அமைந்துள்ளது” என்று ஜேஎன்யு பல்கலை., மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டில்லி ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்த லில் இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இத் தேர்தலில், ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் எந்தப் பதவிக்கான போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேஎன்யு பல்கலை., மாணவர் பேர வைத் தலைவராக தனஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1996 ஆம் ஆண் டுக்குப் பின்னர் ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தேர்வு செய் யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் வெற்றிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதி வில், “டில்லி ஜவகர்லால் நேரு பல் கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு எனது வாழ்த்துகள்.
ஏ.பி.வி.பி அமைப்பினரின் வன் முறை வழிமுறைகளும், கடைசி நிமிடத்தில் இடது வேட்பாளர் ஸ்வாதி சிங்கின் வேட்புமனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம் பலப்படுத்திவிட்டது. இத்தனை வெட் கக்கேடான செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும், ஜேஎன்யூ மாணவர்கள் தங்களது முற்போக்குச் செறிந்த மரபை எப்போதும் போல நிரூபித்துவிட்டனர்.
வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச் சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பாஜகவை வீழ்த் துவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *