கரோனா காலத்தில் மருத்துவமனையிடம் ரூ.162 கோடி நிதி பா.ஜ. பெற்றது ஏன்?

1 Min Read

விசாரணை நடத்த சிவசேனா உத்தவ் அணி கோரிக்கை

மும்பை, மார்ச் 25- சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலைவர் சஞ்சய் ராவத் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில்,
“மும்பையில் பேசிய ராகுல் காந்தி, அதிகார பலம், பண பலம் ஆகிய தீய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று கூறி னார். ஆனால் ராகுலின் பேச்சை ஹிந்துத்துவா, பெண்களுக்கு எதிரான பேச்சு என மோடி திரித்து தவறான கருத்தை பரப்பி வருகிறார்.” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 2021 அக்டோபர் முதல் 2023 அக்டோபர் வரை ரூ.162 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. நோயாளிகளிடம் இருந்து வருமானம் சம்பாதிக்கும் ஒரு மருத்துவமனை எதற்காக தேர்தல் பத்திரங்களை வாங்க வேண்டும்.
கரோனா தொற்று பாதிப்பின்போது மருத்துவமனையிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ எதற்காக நிதி வாங்கியது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *