காஷ்மீரின் லித்தியம் கனிமத்தை கொள்ளையடிக்க பாஜக திட்டம் மெகபூபா முக்தி குற்றச்சாட்டு

1 Min Read

சிறீநகர், மார்ச் 25- தங்கள் முதலாளி களுக்கு பரிசளிக்க ஜம்முவின் லித்தியம் கனி மத்தை கொள்ளை அடிக்க பாஜ முயற் சிப்பதாக மெகபூபா முக்தி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.
மின்சார வாகனங்களில் ரீ-சார்ஜ் செய்யும் பேட்டரி உற்பத்திக்கு லித்தியம் கனிமம் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார வாகன பயன் பாடு அதிகரித்து வரும் நிலையில் லித்தியத்தின் தேவை யும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் அமெரிக்கா, பொலிவியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, சீனா ஆகிய நாடுகளில் லித்தியம் கனிம இருப்பு அதிகளவில் உள்ளது. இந்தியா இதுவரை அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து லித்தியம் இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமைனா பகுதியில் லித்தியம் இருப்பது கண்டறியப்பட்டதாக கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது.

தற்போது அந்த லித்தியத்தை வெட்டி எடுக்கும் பணி களுக்கான ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு விட ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஜ அரசின் இந்த நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முக்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தன் ட்விட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீரின் நீர்வளங்கள், கனிம வளங்களை கொள்ளை அடித்த பாஜ அரசு தற்போது லித்தியத்தின் மீது கண் வைத்துள்ளது.
லடாக் பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை பாஜக ஏன் புறக்கணிக்கிறது என்பது இப்போது தெரிகிறது. லித்தியத்தை வெட்டி எடுப்பதற்கான ஏல அனுமதியை பாஜக அரசு அதன் ஆதரவு பெற்ற முதலாளிகளுக்கு பரிசாக தரும். அதில் கிடைக்கும் சட்டவிரோத வருமா னத்தை அந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் நிதியாக தரும். இப்போது பாஜகவுக்கும், அதன் முதலாளிகளுக்கும் உள்ள தொடர்பு புரிகிறது” என்று காட்டமாக பதிவிட்டு உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *