புதுடில்லி, மார்ச் 25- கருநாடக மாநிலத்திற்கு வறட்சி நிவாரணத்தை உடனடி யாக வழங்க ஒன்றிய அர சுக்கு உத்தரவிடக்கோரி கருநாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள் ளது.
கருநாடகாவில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள மொத்தம் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சி யால் பாதிக்கப்பட்டதாக அறிவித்த மாநில அரசு, ஒன்றிய அரசிடமிருந்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதுதொடர்பாக ஒன்றியக் குழுவை அனுப்பி ஆய்வு செய்த ஒன்றிய அரசு, வறட்சி நிவாரணம் மட்டும் வழங்கவில்லை. ஒன்றிய அரசு வறட்சி நிவாரண நிதி வழங்காத நிலையில், கருநாடகாவிற்கு வறட்சி நிவாரணம் வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தர விடக்கோரி உச்சநீதிமன் றத்தில் மாநில அரசு ரிட் மனு தாக்கல் செய்துள் ளது.
‘ஹோலி’யை யொட்டி ஏப்ரல் 3 வரை உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் விடுமுறை கால அவசர மனுவாக இதை ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கருநாடக அரசு மனு
Leave a comment