மேற்கு வங்கத்தில் தேர்தல்: போட்டியிட இடம் கிடைப்பதில் பிஜேபி மூத்த தலைவர்களுக்கிடையே கடும் மோதல்

viduthalai
1 Min Read

கொல்கத்தா, மார்ச் 25- மேற்கு வங்க மாநிலத்தில் மக்க ளவை தேர்தலில் பாஜ வில் பல மூத்த தலைவர் களுக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் இருப்பது அக்கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத் தில் 42 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. கடந்த 2019இல் நடந்த மக்களவைத் தேர் தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்க ளையும், பாஜக 18 இடங் களையும் கைப்பற்றின. இம்முறை பாஜக 35 தொகுதிகளிலும் வெல்ல வேண்டுமென இலக்கு நிர்ணயித்துள்ளது. தேசிய அளவில் தனது பலத்தை நிரூபிக்க வழக் கம்போல் பாஜகவை விட அதிகமான தொகுதி களை கைப்பற்ற வேண்டு மென்பதில் திரிணாமுல் தலைவரும் மாநில முதல மைச்சருமான மம்தா உறு தியாக உள்ளார். இத னால் மேற்கு வங்கத்தில் அனல் பறக்கும் போட்டி நிலவுகிறது.

இதில் சில மூத்த தலைவர்களுக்கு இம்முறை ‘சீட்’ தராதது பாஜக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 19 வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக ஒன்றிய அமைச்சரும் அலிபுர் துவார் மக்களவைத் தொகுதி உறுப்பினரு மான ஜான் பர்லா, மாநிலங்களவை உறுப் பினருமான அனந்த மகா ராஜ் ஆகியோரை கழற்றி விட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *