டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பேரணி

viduthalai
2 Min Read

புதுடில்லி,மார்ச் 25- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக் குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை அழைப்பாணை அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராக வில்லை.
அதே வேளை இந்த அழைப்பாணை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 20.3.2024 அன்று விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு எந்த தடையும் விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை 21ஆம் தேதி இரவு கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் டில்லி ரோஸ் அவென்யூ நேற்று முன்தினம் (23.3.2024) ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது, நீதிமன்றத்தில் 6 நாட்கள் (28ஆம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ‘இந்தியா ‘கூட்டணி சார்பில் மெகா பேரணி நடத்தப்பட உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் மார்ச் 31 டில்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடத்த உள்ளன.
இந்த பேரணியில் இந்தியா கூட் டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் பா.ஜ.க. அரசு விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைப்பதாக இந்தியா கூட்டணி குற்றம் சாட்டி யுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *