பெரியார் மணியம்மை சமூக பணித்துறை மாணவர்கள் – பேராசிரியர்கள் தாய்லாந்து யுரோஸியா சமூகப் பணியாளர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்பு

viduthalai
1 Min Read

இந்தியா, தமிழ்நாடுஇந்தியா, தமிழ்நாடு
பெரியார் மணியம்மை சமூக பணித்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தாய்லாந்தில் நடந்த 15 யுரோஸியா சமூகப் பணியாளர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.
கருத்தரங்கின் துவக்க விழாவில் பட்டாயா நகர மேயர் பொராமெட் கம்பிச்செட் அவர்களை சமூகப் பணித்துறை மாணவர்களும், பேராசிரியர்களும் சந்தித்தனர். இந்தக் கருத்தரங்கில்சமூக பணித்துறை பேராசிரியர்கள் முனைவர். ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின், முனைவர். ஞானராஜ் மற்றும் சமூக பணித்துறை மாணவர்கள் வெற்றி, சுவேதா , சகானா, கவி நிலவு ஆகியோர் ஆய்வை சமர்ப்பித்தனர். இந்த 15ஆவது யுரோஸியா சமூகப் பணியாளர்கள் மாநாட்டின் போது ரஷ்யாவின் சமூகக் கல்வியாளர்கள் மற்றும் சமூகப் பணி யாளர்கள் ஒன்றியத்திலிருந்து சமூகப் பணியில் ‘அர்ப்பணிப்பு’ என்ற மதிப்புமிக்க விருது சமூகப் பணித்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் இதுவரை 3000 சமூகப் பணியாளர்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது. இதில் 20 நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சமூகப் பணியாளர்கள், கல்வியாளர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
சமூகப் பணித் துறை, றிவிமிஷிஜி – ரஷ்யாவின் டான் மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தாய்லாந்தின் பட்டாயாவில் நடந்த 15ஆவது யுரோஸியா மாநாட்டின் போது, ​​ரஷ்யாவின் ஞிஷிஜிஹி, ரஷ்யாவின் சமூக விளையாட்டு கல்வி தொழில்நுட்பத்தின் தலைவர் மற்றும் அசோவ் குழந்தைகளின் முதல்வர் டாக்டர். எலினா பேயர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *