நிதி அளித்தால் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள்

viduthalai
2 Min Read

புதுடில்லி, மார்ச் 24- ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
தேர்தல் பத்திரத்தில் வெளிப் படைத்தன்மை இல்லை என் றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு கள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
முதலில் இதற்கு கால அவகா சம் கேட்ட எஸ்.பி.அய். உச்சநீதி மன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித் தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக் கைகளை இணைய தளத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கை யில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது.
அதில் பா.ஜ.க.வுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதி யானது. மேலும், நிதி ஒதுக்கும் நிறுவனங்களுக்கே அரசு ஒப் பந்தங்கள் வழங்கப்பட்டதும் இதன்மூலம் உறுதியானது.
இந்த நிலையில், பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனத்துக்கு பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங் களை பாஜக வழங்கியது அம் பலமாகியது.
எந்த நிறுவனம் யாருக்கு நிதி வழங்கியது என்பது குறித்த விவரங்களை நேற்று எஸ்.பி.அய். வங்கி வெளியிட்டது.
இதில், லக்னோவைச் சேர்ந்த அப்கோ இன்ஃப்ராடெக் பிரை வேட் லிமிடெட் என்ற நிறு வனம் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.10 கோடி நிதி அளித்துள்ளது.
அதற்கு முன்னர் அந்த நிறு வனத்துக்கு காஷ்மீரின் கந்தர் பால் மாவட்டத்தில் 6.4 கி.மீ. நீளமுள்ள இசட்-மோர்ச் சுரங் கப்பாதையை அமைப்பதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ரூ.1547 கோடி மதிப்பு கொண்டதாகும். அடுத்த ஆண்டே அதே நிறுவனம் பா.ஜ.க.வுக்கு மீண்டும் ரூ.10 கோடி நிதி அளித்துள்ளது.
அதன் பின்னர் இந்த நிறுவனம் 650 கி.மீ. டில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் 28.92 கிமீ நீளத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து பெற் றுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பிரிவில் குஞ்ச்வானி மற்றும் சித்ரா இடையே 13.3 கி.மீ. பகுதியும், டோமல் மற்றும் கத்ரா இடையே 15.62 கி.மீ. பகுதிகளை கட்டுவதற்கான ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளது.
இதன் மதிப்பு ரூ.1547 கோடி என கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *