பா.ஜ.க.வின் பாணி தொடர்கிறது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ. 50 கோடி பேரம் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

2 Min Read

அரசியல், இந்தியா
பெங்களூரு, மார்ச் 24- கரு நாடக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க பா.ஜனதா தலா ரூ.50 கோடி பேரம் பேசுவதாக முதலமைச்சர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி யுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி
கருநாடகத்தில் காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கடந்த 2019ஆம் ஆண்டு அமைந்தது. இந்த ஆட்சி 14 மாதங்கள் நடைபெற்ற நிலையில் அக்கட் சிகளை சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதா வுக்கு தாவினர்.
இதனால் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டதாக பா.ஜனதா மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதையடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்த லில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தனித்து போட்டியிட்டன.
இதில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
தலா ரூ.50 கோடி பேரம்
இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட் டணி அமைத்துள்ளன.
இதற்கிடையே நாடாளு மன்ற தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டுள்ள நிலையில் காங் கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் களை தலா ரூ.50 கோடிக்கு பேரம் பேசி இழுக்க முயற்சி நடப்பதாக முதலமைச்சர் சித் தராமையா பரபரப்பு குற்றச் சாட்டை கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமெனில் அக் கட்சியை சேர்ந்த 28 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமெனக்கூறி, அவர்க ளுக்கு தலா ரூ.50 கோடி கொடுப் பதாக பா.ஜனதா ஆசை வார்த்தை கூறுவதாக சித்தரா மையா குற்றம்சாட்டி உள் ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று (22.3.2024) செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறிய தாவது:-
தேர்தல் செலவுகள்
கருநாடகத்தில் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கு தலா ரூ.50 கோடி கொடுப்பதாகவும், தேர் தல் செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்து இழுக்க முயற்சி செய்கிறார்கள்.
இந்த பணம் யாருடையது?. இது கருப்புப் பணம் அல்லவா?.
எதிர்க்கட்சிகளின் கழுத்தை நெரிக்கும் பணியை பா.ஜனதா வினர் செய்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தோல்வி பயத்தால் எங்கள் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.
-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *