ஒற்றை ஆட்சி முறையை உருவாக்க முனைப்பாக உள்ள மோடி அசோக் கெலாட் குற்றச்சாட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியா
ஜெய்ப்பூர், மார்ச் 24- நாட்டில் ஜனநாயகத்தை அழித்து, சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்குவதில் பாஜக குறியாக உள்ளது என்று கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது தொடர் பாக ஒன்றிய அரசை கண்டித் துள்ள ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட், நாட்டில் ஜனநாயகம் படு கொலை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.
ராஜஸ்தானில் செய்தியாளர் களிடம் பேசிய அசோக் கெலாட், “நாட்டில் ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது, அரசமைப்புச் சட்டம் துண்டு துண்டாக கிழிக்கப்படுகிறது, நாடு ஆபத்தான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது” என்றும் கூறினார்.
2014இல் மோடி வந்ததில் இருந்து ஜனநாயகத்தின் மீது ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க் கட்சிகள் தாக்கப்படுகின்றன. அரசமைப்பு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படு கின்றன.
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தலில் வெற்றி பெற அனைத்து வழி களையும் கையிலெடுப்பேன் என்று மோடி மற்றொரு முறை நிரூபித்திருக்கிறார் என்று கெலாட் கூறியுள்ளார்.
மேலும், “பாஜகவின் இந்த சர்வாதிகாரப் போக்கு ஜனநா யகத்தின் அடிப்படையாக விளங்கும் தேர்தலை சீர் குலைத்து சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்க முனைந் துள்ளது” என்று தெரிவித் துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *