ஒற்றை ஆட்சி முறையை உருவாக்க முனைப்பாக உள்ள மோடி அசோக் கெலாட் குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

இந்தியா
ஜெய்ப்பூர், மார்ச் 24- நாட்டில் ஜனநாயகத்தை அழித்து, சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்குவதில் பாஜக குறியாக உள்ளது என்று கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது தொடர் பாக ஒன்றிய அரசை கண்டித் துள்ள ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட், நாட்டில் ஜனநாயகம் படு கொலை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.
ராஜஸ்தானில் செய்தியாளர் களிடம் பேசிய அசோக் கெலாட், “நாட்டில் ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது, அரசமைப்புச் சட்டம் துண்டு துண்டாக கிழிக்கப்படுகிறது, நாடு ஆபத்தான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது” என்றும் கூறினார்.
2014இல் மோடி வந்ததில் இருந்து ஜனநாயகத்தின் மீது ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க் கட்சிகள் தாக்கப்படுகின்றன. அரசமைப்பு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படு கின்றன.
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தலில் வெற்றி பெற அனைத்து வழி களையும் கையிலெடுப்பேன் என்று மோடி மற்றொரு முறை நிரூபித்திருக்கிறார் என்று கெலாட் கூறியுள்ளார்.
மேலும், “பாஜகவின் இந்த சர்வாதிகாரப் போக்கு ஜனநா யகத்தின் அடிப்படையாக விளங்கும் தேர்தலை சீர் குலைத்து சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்க முனைந் துள்ளது” என்று தெரிவித் துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *