வெள்ள பாதிப்பின் போது வராத பிரதமர் ஓட்டுக்காக மட்டும் ஓடோடி வருவது ஏன்? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

viduthalai
1 Min Read

அரசியல், தமிழ்நாடு
மதுரை, மார்ச் 24 மதுரையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;”கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். எய்ம்ஸ் மருத் துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். அந்த கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள் ளேன். நீங்கள் மருத்துவமனையை கட்டிமுடிக்கும் வரை நான் இந்த செங்கல்லை கொடுக்க மாட்டேன்.
2020இல் நாட்டை வல்லரசாக் குவேன் எனக்கூறினார். ஆனால் இப்போது 2047ஆம் ஆண்டு நாட்டை வல்லரசாக மாற்றுவேன் என கூறியுள்ளார். பிரதமர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால் ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளார். மிக்ஜம் புயல் பாதிப்பு, மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழையால் பாதிக் கப்பட்டபோது பிரதமர் தமிழ் நாடு வரவில்லை. மழை வெள்ள நிவாரண நிதியாக முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலின் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார். ஆனால் மத்திய நிதி அமைச்சரோ நாங்கள் என்ன ஏ.டி.எம். இயந்திரமா எனக் கேட்டார். மழை, வெள்ள பாதிப் புக்காக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் நிதி கூட கொடுக்க வில்லை.” இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *