கழகப் பொறுப்பாளர்களை சந்தித்த “இந்தியா” கூட்டணியின் மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன்

viduthalai
1 Min Read

மதுரை,மார்ச் 23- “இந்தியா” கூட்டணியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் மதுரை மாவட்ட தலைவர் அ.முருகா னந்தம் இல்லத்தில் கழக மாநில மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்தனர்.
பொறுப்பாளர்கள் அனைவரும் சால்வைகளை, புத்தகங்களை வழங்கி வெற்றி பெற வாழ்த்தினர். நிகழ்வில் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்ததையும், வெங்கடேசன் அவர்களின் அரும் பணி யைப் பாராட்டி கழகம் பாராட்டு விழா எடுக்கும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியதையும் எடுத்துச் சொன்னார்.

நிகழ்வில் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் இரா.சுரேஷ், எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு, மாநில செயலாளர் சுப.முருகானந்தம், பேராசிரியர் சுப.பெரியார் பித்தன், வழக்குரைஞர் நா.கணேசன், மாவட்ட ப.க. தலைவர் ச.பால்ராஜ், மு.ரமேஷ், திமுக சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் மு.விக்கி, இரா.திருப்பதி, நா.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் க.சிவா, தனுஷ்கோடி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெ.காசி செயலாளர் இளைஞர் அணி அமைப்பாளர் வேல்துரை, மாணவர் கழகம் தேவராஜ், பாண்டியன், பகுதி பொறுப்பாளர்கள் மு.மாரிமுத்து, ஆட்டோ செல்வம், செல்லூர் தனசேகரன், பிச்சை பாண்டி, ராஜா, ஓட்டுநர் தியாகராஜன், மாவட்ட தலைவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தேனீர், பழச்சாறு வழங்கினர். தேர்தலில் அமோக வெற்றிபெற பணியாற்றுவோம் எனக்கூறி வழியனுப்பி வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *