திருவையாறு முதுபெரும் பெரியார் தொண்டர் மு. வடிவேலு மறைவு

1 Min Read

கழகத் தலைவர் இரங்கல்

திருவையாறின் முது பெரும் பெரியார் பெருந் தொண்டர்களில் ஒருவரான மானமிகு தோழர்
மு. வடிவேலு அவர்கள் (91 வயது) முதுமையின் காரணமாக நேற்று (21.3.2024) மாலை காலமானார் என் பதை அறிந்து மிகவும் துயரப்படுகி றோம். மிகவும் அடக்கமும், கொள்கை உறுதியும் கொண்ட தோழர் வடிவேலு அவர்கள், வேலு சிட்பண்டு என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருபவர்.
அவர் தொடர்ந்த விடுதலை வாசகர். சில மாதங்களுக்கு முன் நேரில் சென்று அவருடைய நலம் விசாரித்தபோது நம்மிடம் விடுதலை சந்தா செலுத்தி மகிழ்ந்தார். மறைவுற்ற மு. வடிவேலு அவர்களது விழிகள் மருத்துவமனைக்கு கொடை அளிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவரை இழந்து வருந்தும் அவரது பிள்ளைகள் டி.வி. பன்னீர்செல்வம், டி.வி. செல்வகுமரன், டி.வி. கலைச்செல்வன், மகள்கள் பொற்செல்வி, ஜெயந்தி முதலிய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். நேற்றே நாம் அவருடைய மகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.3.2024
குறிப்பு: இறுதி நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *