பிஜேபி அரசின் சாதனை உலகில் மிக மோசமான காற்று மாசு இந்தியாவிற்கு மூன்றாவது இடம்

1 Min Read

புதுடில்லி,மார்ச் 21- உலகில் மிக மோசமான அளவில் காற்று மாசு பாடு நிலவும் நாடுகளின் பட்டிய லில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது.

காற்றின் தர அளவுகளை மதிப்பீடு செய்யும் சுவிட்சர்லாந்தின் ’அய்க்யூஏர்’ அமைப்பு 2023ஆம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, காற்று மாசு அளவீடான ‘பிஎம் 2.5 செறிவு’ என்பது கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராமை விட அதிக மாக இருக்கக்கூடாது.
ஆனால் இந்தியாவின் வருடாந் திர ‘பிஎம் 2.5 செறிவு’ கன மீட்ட ருக்கு 54.4 மைக்ரோகிராமாக (54.4 ரீ/னீ3) உள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் வங்கதேசமும் இரண்டா வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. 2022ஆம் ஆண்டில் இந்தியா 8ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது 3ஆவது இடம் பிடித்துள்ளது.

134 நாடுகளில் 7,812 இடங்களில் பெறப்பட்ட காற்றுத் தரம் தொடர்பான தரவுகளின் அடிப் படையில் இந்தப் பட்டியல் உரு வாக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான அளவில் காற்று மாசு நிலவும் முதல் 50 நகரங்களில் இந்தியாவைச் சேர்ந்த 42 நகரங் கள் இடம்பிடித்துள்ளன.
இதில் பீகாரில் உள்ள பெகுச ராய் முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து குவாஹாட்டி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், பாகிஸ்தானின் லாகூர் உள்ளன. உலக அளவில் மிகவும் மாசுபட்ட தலைநகரமாக டில்லி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *