பீகாரில் பிஜேபி கூட்டணியில் குழப்பம் ஒன்றிய அமைச்சர் பதவி விலகல்

viduthalai
1 Min Read

பாட்னா,மார்ச் 21- பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது.

இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வா னுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2020இல் ராம் விலாஸ் பஸ்வான் உயிரிழந்த நிலையில், அவரது சகோதர் பசுபதி பராஸுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, பசு பதி பராஸ் மற்றும் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வா னுக்கு இடையே ஏற்பட்ட மோத லால் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இதனைத் தொடர்ந்து, ராஷ்டி ரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை பசுபதி பராஸும், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) என்ற கட்சியை சிராஜ் பஸ்வானும் தொடங்கினர். இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்த லில் சிராஜுடன் கூட்டணி அமைப்ப தாக பா.ஜ.க அறிவித்ததை தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து பசுபதி பராஸ் விலகியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *