நாங்கள் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படும் – காங்கிரஸ் உறுதி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,மார்ச் 19- காங்கிரஸ் பொதுச்செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:-
பஹுத்வா கருநா டகா என்ற அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் வேலையின்மையும், ஊதி யப் பற்றாக்குறையும் நில வுவதாக கூறப்பட்டுள் ளது.
2011-2012 நிதியாண் டுக்கும், 2022-2023 நிதி யாண்டுக்கும் இடையே சமூக பாதுகாப்பு மற்றும் சலுகைகளுடன் கூடிய முறையான வேலை வாய்ப்பில் இருப்பவர்கள் 25 சதவீதத்துக்கும் குறை வாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பில் இருக்கும் தனிநபர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதில் பெண்களின் பங்கு 56.5 சதவீதத்தில் இருந்து 64.3 சதவீதமாக உயர்ந்துள் ளது.
2011-2012 நிதியாண் டுக்கும், 2022-2023 நிதி யாண்டுக்கும் இடையே ஊதியம் அதிகரித்தது.
ஆனால், விலைவாசி உயர்வுடன் ஒப்பிடுகை யில் அவர்களது ஊதிய உயர்வு போதுமானது அல்ல.
நாட்டில் 34 சதவீத குடும்பங்கள், நாள் ஒன் றுக்கு ரூ.375-க்கும் குறை வான ஊதியத்தையே ஈட்டுகின்றன.

தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன் றுக்கு ரூ.400 என்று நிர்ணயித்தால், ஊதியப் பற்றாக் குறையை தீர்க்க முடியும். மக்களின் குறைகள் மற் றும் பிரச்சினைகளை அறிந்த பிறகே 5 வாக்குறுதி களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

படித்த இளைஞர்க ளுக்கு உதவித் தொகையு டன் கூடிய ஓராண்டு பயிற்சி, ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித் துள்ளோம்.
இந்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை, ஊதியப் பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்த்து, நாட்டை வளமான பாதைக்கு அழைத்து செல் வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *