பிஆர்எஸ் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்தனர்

viduthalai
1 Min Read

அய்தராபாத், மார்ச் 18 தெலங்கானாவில் எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தை ஆளும் காங் கிரஸ் கட்சியில் (17.4.2024) இணைந்தனர்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பிஆர்எஸ் கட்சியைச் சோந்த வேறு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மை யில் பாஜகவில் இணைந்தனர். மற்றொரு பிஆர்எஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகர் காங்கிரஸில் 16_3_2024 அன்று இணைந்தார். இப்போது அக்கட்சி எம்பி. ரஞ்சித் ரெட்டி, எம்எல்ஏ நாகேந்தர் ஆகியோர் காங்கிரஸில் இணைந்துள்ளனர். முதல மைச்சர் ரேவந்த் ரெட்டி, மாநிலத்துக்கான பொறுப்பாளர்தீபா தாஸ்முன்ஷி முன்னிலையில் அவர்கள் இருவரும் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
இது தொடர்பாக ரஞ்சித் ரெட்டி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த கடினமான முடிவை எடுக்க நேரிட்டது. இதுவரை எனக்கு சிறந்த வாய்ப்புகள் அளித்த பிஆர்எஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளு மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வில குவது தொடர்பாக தொகுதி மக்களுக்கும், எனது ஆதரவாளர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *