தமிழ்நாட்டில் ராகுல் – கார்கே சூறாவளிப் பிரச்சாரம்

1 Min Read

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தகவல்
சென்னை, மார்ச் 18- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று (17.3.2024) காலை சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் பிரச் சாரத்திற்காக ராகுல் காந்தி தமிழ் நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதி களுக்கும் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் இருக் கிறது.
மும்பையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கேவை சந்தித்து அதற் கான சுற்றுப்பயணத் திட்டங்கள் வகுக்கப்படும்.
தேர்தல் பத்திரங்களில் அரசி யல் கட்சிகள் பெற்ற நிதிகள் குறித்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சிதான்.
எங்கள் மடியில் கனமில்லை. எனவே எங்களுக்கு பயமில்லை. இதனால்தான் நாங்கள் தைரிய மாக அதை வெளியிடச் சொல்லி வலியுறுத்தினோம்.
இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. வருமானவரி சோதனை, அமலாக் கத்துறை சோதனை, சி.பி.அய். சோதனை ஆகியவற்றுக்கு பின்னர் நிதிகளைப் பெறுகின்றனர்.
இதில் பெருமளவு உள்நோக் கங்கள் உள்ளன. தேர்தல் பிரச் சாரக் கூட்டங்களில் மோடி இதற் கெல்லாம் பதில் சொல்வாரா?
முதல் கட்டத்திலேயே தமிழ் நாட்டில் வாக்குப்பதிவு நடக்கப் போகிறது என்பது, மோடிக்கு எப்படி முதலாவது தெரிந்தது? அதனால் தான் அவர் தமிழ்நாட்டை மய்யமாக வைத்து முதலில் தொடர்ந்து பிரசாரம் செய்து கொண்டு இருந்தாரா?.
இதையெல்லாம் பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக சுயமாக நடத்துகிறதா?
இல்லையேல் மோடிக்கு ஆதர வாகவா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *