தமிழ்நாடு ஆளுநர்மீது குடியரசுத் தலைவரிடம் புகார் தி.மு.க. அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் தின் பதிவாளர், அனைத்து கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ஆளுநர் மாளிகை, பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் பி.எட் மாணவர்களின் வாக் காளர் எண்களை சேகரிக்க அறிவு றுத்தி உள்ளது.

அனைத்து கல்லூரி முதல்வர்களும், வருகிற 19ஆம் தேதிக்குள் மாணவர் களின் வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை சேகரித்து சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டது. இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த சுற்றறிக்கையை பல்கலைக்கழகத் தின் பதிவாளர் நேற்று முன்தினம் (14.3.2024) இரவு திரும்ப பெற்றார். இந்த விவகாரத்தில் தி.மு.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. நாடாளு மன்ற உறுப்பினர் வில்சன் வெளியிட் டுள்ள பதிவில், ‘ஆளுநர் மாளிகைக்கு எதற்கு மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்? எல்லை மீறும் ஆளுநரின் செயல் குறித்து குடி யரசுத் தலைவரிடம் புகார் தெரி விக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *