அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் மரியாதை

viduthalai
3 Min Read

சென்னை, மார்ச் 16 தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2024) காலை 10 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
இதையடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண், தந்தை பெரியார் நினைவிடத்திலும் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, திராவிடன் நிதி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் அய்.ஏ.எஸ்., பயிற்சி மய்யம், திராவிட தொழிலாளரணி, பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கிய தென்றல் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

திராவிடர் கழகம்

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பாக திருமதி வீ. கவிதா அவர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, சி. வெற்றிச்செல்வி, வி.கே.ஆர். பெரியார்செல்வி, டாக்டர் மீனாம்பாள், ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், பேராசிரியர் நம். சீனிவாசன், திராவிடன் நிதி அருள்செல்வன், தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், வழக்குரைஞர் சு. குமாரதேவன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு,

திராவிடர் கழகம்

மகளிரணி தோழர்கள்: மு. பசும்பொன், தங்க. தனலட்சுமி, மோகனப் பிரியா, மு. பவானி, த.மரகதமணி, க. வெண்ணிலா, வி.வளர்மதி, செ.பெ. தொண்டறம், மா. சண்முகலட்சுமி, வி. தங்கமணி, மா. தமிழ்அரசி, பூவை. செல்வி, ராணி, பா. ரமணி, கீதா, முகப்பேர் செல்வி, லலிதா, பகுத்தறிவு, மணிமேகலை, இரா. நூர்ஜஹான், மோ. மீனாம்பாள், இரா. சு.உத்ரா, அருணா, மற்றும் மகளிர்கள் கலந்துகொண்டனர்
கோ.வீ. ராகவன், சைதை தென்றல், அரும்பாக்கம் சா. தாமோதரன், வழக்குரைஞர் துரைஅருண், நா. மதிவாணன், மு.இரா. மாணிக்கம், கி. இராமலிங்கம், கோ. தங்கமணி, நா. பார்த்திபன், பா. பாஸ்கர், க. செல்லப்பன், சி.சித்தார்த்தன், வழக்குரைஞர் ஜெ. துரைசாமி, வழக்குரைஞர் மு. வேலவன், அயன்புரம் சு. துரைராசு, சி. காமராஜ், பா. பார்த்திபன், ஆவடி பா. தென்னரசு, சிவ. இரவிச்சந்திரன், உடுமலை வடிவேல், ரகுபதி, பூவை தமிழ்ச்செல்வன், க. கலைமணி, முகப்பேர் முரளி, அ.வெ. நடராசன், சி. வச்சிரவேலு, பெரியார் மாணாக்கன் பூ. இராமலிங்கம், தனுஷ்கோடி, தாம்பரம் சு. மோகன்ராஜ், சீ. இலட்சுமிபதி, ந. கதிரவன், பி. சீனிவாசன், படப்பை ஆ. சந்திரசேகர், திருவொற்றியூர் பெ.செல்வராசு, ஓவியர் பெரு. இளங்கோ, ஏ. மணிவண்ணன், நா. தமிழனியன், மாடம்பாக்கம் வெற்றிவீரன், கும்மிடிப்பூண்டி உதயகுமார், பொன்னேரி அருள் மற்றும் திரளான தோழர் தோழியர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகம்

 

திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *