குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

2 Min Read

சென்னையில் பங்கேற்றார் திருமாவளவன்

சென்னை, மார்ச் 16- குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (15.3.2024) ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் 4 ஆண்டு களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே மிகக் கடுமையாக நமது எதிர்ப்பை தெரிவித்தோம்.
மதம், இனத்தின் பெயரால் படுகொலை கள் நிகழும்போது, சொந்த நாட் டில் வாழமுடியாமல் அண்டை நாட்டுக்கு புலம் பெயர்வது தவிர்க்க முடியாதது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை முஸ் லிம் நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து கடந்த 2014 டிசம்பர் 31ஆ-ம் தேதிக்கு முன்பு வந்தவர் களை மத அடிப்படையில் அடை யாளப்படுத்தி, குடியுரிமை வழங் குவதற்கான திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
அதில், முஸ்லிம்கள் தவிர அனைவருக்கும் குடியுரிமை வழங் கப்படும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு வந் தவர்களில் முஸ்லிம்கள் இருந்தால், அவர்கள் வீடு உள்ளிட்ட அனைத் தையும் விட்டுவிட்டு முகாம்களுக்கு செல்லவேண்டும்.
இதன்மூலம், அவர்களது வாக்குதேவை இல்லை, இந்துக் களின் வாக்குமட்டும் போதும் என்ற முடிவுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக வந்துவிட்டன.
இந்துக்கள் ஜாதி ரீதியாக சிதறி கிடக்கின்றனர். எனவே, கிறிஸ்த வர்கள், முஸ்லிம்களால் இந்துக் கள் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி, எளிதாக இந்துக்களை ஒன்று சேர்க்கின்றனர்.

100 சதவீத இந்துக்களையும் தன் பக்கம் இழுத்தால், நினைக்கும் சாம்ராஜ்ஜியத்தை 1,000 ஆண்டுக ளுக்கு பாஜகவால் நடத்த முடியும்.
தேர்தல் பத்திரம் என்னும் சட்டப்பூர்வமான ஊழலை பாஜக செய்துள்ளது. இதை வெளிக் கொணர்ந்தவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.
இதையெல்லாம் மறைக்க, போதைப் பொருள் விவகாரத்தை ஒன்றிய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விசிக துணை பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, தமிழினியன், எழில் கரோலின், தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெற வலியுறுத்தி, ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்க மிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *