ராகுல் காந்தியின் நடைப்பயணம் மும்பையில் நாளை நிறைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

1 Min Read

மும்பை, மார்ச் 16- மும்பையில் தாளை நடை பெறும் ராகுல்காந்தி நடைபயண நிறைவு விழாவில் முதலமைச்சர் முகஸ்டாலின் உள் ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மராட்டியத்தில் நடைபயணம்
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 14ஆம்தேதி மணிப்பூரில் தொடங் கினார். இந்த நடைபயணம் மராட் டியத்தில் நேற்று 4ஆவது நாளாக நடந்தது. பால்கர் மாவட்டத்தில் அவர் திறந்த வாகனத்தில் சென்ற படி பொதுமக்களை சந்தித்தார். மேலும் ஆங்காங்கே அவர் மக்கள் மத்தியில் பேசினார்.

நாளை நடைபயண நிறைவு
ராகுல்காந்தியின் நடைபயணம் இன்று (16.3.2024) தானே மாவட் டத்தில் நடைபெறுகிறது.
அவர் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மும்பை தாதரில் உள்ள சட்ட மேதை அம்பேத்கரின் நினை விடமான சைத்யபூமியில் நடைப் பயணத்தை நிறைவு செய்கிறார்.
பின்னர் நாளை மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக் கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்க இருப்பதாக மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *