வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராமல் ஓட்டு கேட்க மட்டும் பிரதமர் மோடி அடிக்கடி வருவாரா? பிரதமரை நோக்கி தமிழ்நாடு முதலமைச்சர் நெற்றியடி கேள்வி

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 15 வட சென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின்கீழ் 11 துறைகளை உள்ளடக்கி ரூ.4,181 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளில் முதல்கட்டமாக 87 பணிகளை சென்னை தங்கசாலை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.3.2024) தொடங்கி வைத்தார். மீதமுள்ள திட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் செயல் படுத்தப்பட உள்ளன. மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத் துக்கான இலச்சினையையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: சென்னை மீண்டும் புதுப்பொலிவு அடைந்து கொண்டு வருகிறது. இதற்கான சிறப்புத் திட்டம்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம். கடந்த நிதி நிலையறிக்கையில் இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக் கினோம். ஆனால், வட சென்னையின் மக்கள்தொகை, இடப்பற்றாக்குறை, போக்கு வரத்து நெரிசல், இந்தப் பகுதி மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள், இதையெல்லாம் மனதில் வைத்து, இத்தொகையை இன்று 4 மடங்கு உயர்த்தி, ரூ.4,181 கோடியில் 11 அரசுத் துறைகளுடன் இணைந்து, வட சென்னை வளர்ச்சிக்கு இந்த மெகா திட்டம் செயல்பட போகிறது.

ரூ.640 கோடியில் கொடுங் கையூர் உயிரி சுரங்கத் திட்டம், ரூ.238 கோடியில் இரு பெரிய பாலங்கள், ரூ.80 கோடியில் தணி காசலம் கால்வாய் புனரமைப்பு, ரூ.823 கோடியில் பாரிமுனை பேருந்து முனையம் மறுகட்டு மானம், 15 இடங்களில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 7,060 சேதமடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 9,798 புதிய குடியிருப்புகள் ரூ.567.68 கோடியில் புதிதாக கட்ட உள்ளோம்.
கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியும், சென்னைக்கு மட்டு மல்ல; தமிழ்நாடு முழுவதற்கும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் கன்னியாகுமரி வருகிறார். சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர அல்ல; ஓட்டுக் கேட்டு வரப்போகி றார். சென்னை வெள்ளத்தில் மிதந்தபோது மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்தபோது மக்களை பார்க்க வராத பிரதமர் ஓட்டுக் கேட்டு வருவது மடடும் நியாயமாக இருக்கிறதா?
குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, அன்றே ஹெலிகாப்டரில் சென்று பார்த்து, நிவாரண நிதி கொடுத்தாரே. குஜராத்துக்கு அன்றே நிதி தரு வதும், தமிழ்நாட்டுக்கு 3 மாதம் சென்ற பிறகும் நிதி தர மனமில் லாமல் போவதும்ஏன்? இதை கேட்டால் நம்மை பிரிவினைவாதி என்று கூறுகின்றனர்.

சென்னை மெட்ரோரயில் 2-ஆம் கட்ட பணிக்கு நிதி கேட்டேன். நமக்கு அடுத்து கேட்ட மாநிலங் களுக்கு வழங்குகின்றனர். நமக்கு ஒன்றும் தரவில்லை.
பிரிவினை எண்ணம் எங்க ளுக்கு இல்லை.தேசபக்தி பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டாம். தமிழ்நாட்டின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக இந்தியாவையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு வந் துள்ளது. அதற்கு துணைநிற்க உங்களை அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர் பாபு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, சி.வி.கணேசன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *