ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு

2 Min Read

காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள்

புதுடில்லி,மார்ச் 14- வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு வேலை களில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படும் என்றும் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான அய்ந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மகாராட்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் நடை பெற்ற இந்திய நியாய நடைப் பயணத்தின் ஒரு பகுதியாக பெண்கள் சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்ன தாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே ஒரு காட்சிப் பதிவு மூலம் இது தொடர்பாக விளக்கமளித்திருந் தார். அந்த 5 வாக்குறுதிகள்:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
ஏழைப் பெண்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழி யர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்ப டுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணி யாளர் நியமனம் செய்யப்படுவார்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட் டங்களிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான சாவித்ரிபாய் பூலே தங்கும் விடுதிகள் கட்டப்படும்.
முன்னதாக, காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இளைஞர்களை மய்யப் படுத்தி நிறைவேற்றப்படவுள்ள 5 வாக் குறுதிகள் வெளியிடப்பட்டன. அதன் விவரம்:
நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. ஒன்றிய அரசு துறைகளில் 30 லட்சம் காலி இடங்கள் உள்ளன.
ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அவை அனைத்தும் நிரப்பப்படும்.
வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும். பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

தனியார் மற்றும் பொதுத்துறை தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை கட்டாயம் ஓராண்டு பயிற்சியில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பயிற்சி ஊதியம் வழங்கப்படும். இதன்மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி, ஊதியம் கிடைக்கும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ள உணவு விநியோகிப்பாளர்களின் வேலைவாய்ப்பை முறைப்படுத்தி, சமூக பாதுகாப்பை கொடுப்போம்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி உள்ளது. அதை மக்களவை தொகுதிக்கு ரூ.10 கோடி வீதம் ஒதுக்குவோம். இளை ஞர் தொழில் தொடங்க கடன் வழங்கப் படும். இந்த 5 வாக்குறுதி களையும் காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக் கத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *