இலையுதிர் காலமோ!

viduthalai
1 Min Read

மாற்று கட்சியிலிருந்து பிரமுர்களையும், பதவியாளர் களையும் கடத்தும் பி.ஜே.பி., தான் விரித்த வலையில் தானே விழுந்ததுபோல, பி.ஜே.பி.யிலிருந்து எம்.பி.,க்கள் இப்பொழுது காங்கிரசில் இணைந்து வருகின்றனர். கடந்த ஞாயிறன்று அரியானா மாநில பி.ஜே.பி. எம்.பி., பிரிஜேந்திர சிங் காங்கிரசில் இணைந்தார். இப்பொழுது ராஜஸ்தான் பி.ஜே.பி. எம்.பி., ராகுல் கஸ்வான் காங்கிரசில் இணைந்துள்ளார்.

எல்லாம் உ.பி.,க்குத்தானா?
உத்தரப்பிரதேசத்தில் ரூ.44 ஆயிரம் கோடிக்கான மேம்பாட்டுத் திட்டத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் மேலும் மேலும் திட்டங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
இதில் பிரிவினைவாதிகள் யார்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *