வெள்ளமடம்,செப்.28- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழாவில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளமடம் கிறிஸ்துநகரில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மரக் கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாணீதுகாப்பை வலியுறுத் தினார்.
திராவிடர்கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், ஒன்றிய தலைவர்கள் மா.ஆறுமுகம், எஸ்.குமாரதாஸ், மகளிர் பாசறை அமைப்பாளர் மஞ்சு குமார தாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், அமைப்பாளர் ம.தமிழ்மதி, கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் கழகப் பொறுப்பாளர் இராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.