பெரியார் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடும் விழா

0 Min Read

வெள்ளமடம்,செப்.28- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழாவில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளமடம் கிறிஸ்துநகரில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மரக் கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாணீதுகாப்பை வலியுறுத் தினார்.

திராவிடர்கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், ஒன்றிய தலைவர்கள் மா.ஆறுமுகம், எஸ்.குமாரதாஸ், மகளிர் பாசறை அமைப்பாளர் மஞ்சு குமார தாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், அமைப்பாளர் ம.தமிழ்மதி, கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் கழகப் பொறுப்பாளர் இராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *