உலகிலேயே அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடு எது? பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிக்கை

1 Min Read

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்குத் தள்ளி கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட் டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. அதன்படி கனடாவில் 59.96% படித்தவர்கள். மேலும் 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
லக்சம்பர்க் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய முன்னணி நாடுகள் 6 மற்றும் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளன. இந்த பந்தயத்தில் தென் கொரியா கூட அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி 4ஆவது இடத்தில் உள்ளது.
கல்வி தகுதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 5ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், அயர்லாந்தை பின்னுக்கு தள்ளி பிரிட்டன் 8ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் கல்வி அறிவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய புள்ளியியல் கழகம் கல்வி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் கல்வித் தகுதி மிகவும் பின்தங்கி இருந்ததாக குறிப் பிட்டிருந்தது.

இவை ஒருபுறம் இருக்க அதிக கல்வி அறிவு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இந்தியா மட்டுமன்றி உலக அளவில் கேரளா முன்னிலை வகிக்கிறது. அதன்படி மொத்த மக்கள் தொகையில் 39% பேர் பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *