புதுடில்லி, மார்ச் 12- காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
பிரதமர் மோடி தனது பல் வேறு பயணங்களுக்கு இடையே அசாமின் காசி ரங்கா தேசிய பூங்காவில் நேரத்தை செலவிட்டதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகி றோம்.
யானைமீது சவாரி செய்து. வன விலங்குகளை கண்டு ரசிக்கும் பிர தமர் மோடி மணிப்பூர் சென்று பாதிக் கப்பட்ட மக்களை சந்திக்காதது ஏன்? வடகிழக்கு பிராந்திய பகுதிகள் வன்முறையை எதிர்கொள்ளும் போது, மோடி அரசு ஏன் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறது?
இவ்வாறு ஜெய்ராம்ரமேஷ் கூறினார்.
விலங்குகளை ரசிப்பார் ஆனால் அவதிப்படும் மணிப்பூருக்கு செல்ல மாட்டார் அவர்தான் பிரதமர் மோடி காங்கிரஸ் வருணனை

Leave a Comment