பெரியார் மண் என்றால் என்ன?

1 Min Read

அன்னை மணியம்மையார் அவர்களின் 105 ஆவது பிறந்த நாள் விழா தமிழ்நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது! தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தோழர்கள் புடைசூழ அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்தார்கள்.
தொடர்ந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன், அன்னை மணியம்மையார் அவர்களின் படம் வைத்துத் தோழர்கள் சிறப்பு செய்தனர்!
அதுசமயம் இயக்கத் தோழர்கள் பலர் பங்கேற்றாலும், எப்போதும் நம்முடன் இருக்கும் இனவுணர்வாளர் தஞ்சை விசிறி சாமியார் கலந்து கொண்டார். இதுதவிர கழுத்தில் உத்திராட்சம் அணிந்து, நெற்றியில் சந்தனம் இட்டு ஒருவரும், மற்றொரு ஆன்மீகவாதியான நண்பர் ஒருவரும் சாலையில் சென்றவர்களும் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்!
தோழர்கள் முழக்கத்திற்கு பதில் முழக்கமிட்டு குழுப்படத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் மூவரையும் மட்டும் நாம் தனிப்படம் எடுத்தோம்!
அவர்களிடம் பேசிய போது, “பெரியார் எங்கள் தலைவர்” என்றார்கள். ஆக கருப்புச் சட்டைக்கு மட்டுமல்ல, எல்லா நிறச் சட்டைகளுக்கும் சொந்தக்காரர் பெரியார்! அதனால் தான் இது அவரது மண்!
தகவல்: வி.சி.வில்வம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *