தொழிலாளர் நலவாரிய பலன்கள் மக்களுக்கு போய்ச் சேரும் வகையில் நமது பணி அமைய வேண்டும்!

viduthalai
2 Min Read

கொக்கூர் கலந்துரையாடலில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வேண்டுகோள்!

கொக்கூர், மார்ச் 9- தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழி லாளர் சங்கம் மற்றும் மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையா டல் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொக்கூர் சமுதாயக் கூடத்தில் 7.3.2024 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட திரா விடர் கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் குத் தாலம் ஒன்றிய தலைவர் சா.முரு கையன் முன்னிலையில் நடை பெற்றது. குத்தாலம் ஒன்றிய செய லாளர் கு.இளமாறன் வரவேற்பு ரையாற்றினார்.

திராவிடர் கழகம்

மாவட்ட செயலாளர் கி.தள பதிராஜ் கலந்துரையாடல் கூட் டத்தின் நோக்கத்தினை எடுத்து ரைத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் பிரபாகரன், கலைக் குமார், மகளிரணி தோழர் ஜே. ஷோபா, குத்தாலம் ஒன்றிய தலை வர் சா.முருகையன், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மற்றும் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில தொழிலாளரணி செயலா ளர் திருச்சி மு.சேகர் கருத்துரை யாற்றினார்.
அவர் தனது உரையில் திரா விடர் கழக தொழிலாளரணியின் செயல்பாடுகளை விளக்கி அதில் தோழர்கள் பெருவாரியாக பங் கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் பெரும்பாலான நல வாரியங்களை அமைத்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான். நலவாரியங்கள் மூலம் மக்களுக்கு ஏராளமான உதவியும் சலுகை களும் வழங்கப்பட்டு வருகிறது என்று சொல்லி தொழிலாளர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு கிட்டும் பலன்களை விரிவாக எடுத் துரைத்து அது மக்களுக்கு போய் சேரும் வகையில் நமது பணி அமைய வேண்டும் என்றார்.

மாவட்ட விவசாய அணி செய லாளர் கு.இளஞ்செழியன் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், பெரியார் தொண் டர் கொக்கூர் அ.முத்தையன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காம ராஜ், ஒன்றிய தலைவர் டி.வி.இளங் கோவன், செயலாளர் அ.சாமி துரை, கொள்ளிடம் ஒன்றிய செய லாளர் பூ.பாண்டுரங்கன், குத்தா லம் ஒன்றிய துணைத்தலைவர் மு.பாலசுந்தரம், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், மற்றும் ஏராளமான கழக தோழர்கள், மகளிரணியினர், கொக்கூர் பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பெரியார் பெருந் தொண்டர் கொக்கூர் கோவிந்த சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கு.இளமாறன் வாழ்வி ணையர் இ.சாந்தி ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், மாவட்ட திராவிடர் கழக தொழி லாளரணியில் உறுப்பினர்களாக பெருவாரியான தோழர்களை சேர்ப்பது எனவும், தொழிலாள ரணி உறுப்பினர்கள் அனைவரை யும் நலவாரியத்தில் பதியச் செய் வது எனவும், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்தநாளை மார்ச் 10 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குத்தாலம் ஒன்றிய துணைத் தலைவர் மு.பாலசுந்தரம் ஆறுமாத விடுதலை சந்தாவினை மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் அளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *