உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத பாரத ஸ்டேட் வங்கி மீது அவமதிப்பு வழக்கு பதினோராம் தேதி விசாரணைக்கு வருகிறது

2 Min Read

புதுடில்லி, மார்ச்.8- தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங் களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கும் பாரத ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது.

கால நீட்டிப்பு கேட்கும் வங்கி
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15ஆம் தேதி ரத்து செய்தது.
இதுவரை தேர்தல் பத்திரங்களை வாங் கியவர்கள், அவற்றின் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகள், நன்கொடை தொகை ஆகிய விவரங்களை மார்ச் 6ஆம்தேதிக்குள் தேர் தல் ஆணையத்திடம் சமர்ப் பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இதற்கிடையே, இந்த கால அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி மனுதாக்கல் செய்துள்ளது.
அம்மனு, 11ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், காமன் காஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
அந்த மனுக்களில், ‘கால அவகாசம் முடிவதற்கு 2 நாட்களே இருக்கும்போது பாரத ஸ்டேட் வங்கி ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மனு தீயநோக்கம் கொண்டது.
வேண்டுமென்றே உச்ச நீதிமன்றம் உத்தர வுக்கு கீழ்ப்படியாமலும், மீறும்வகையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அதிகாரத்தை குறைத்து மதிப்பிட தெளிவான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி
டி.ஒய்.சந்திரசூட் தலை மையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது தலைமை நீதிபதி, “ஒரு
இ-மெயில் அனுப் புங்கள். 11ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பிக் கிறேன்” என்று கூறினார். எனவே, இம் மனுக்கள் 11ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *