காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி உறுதி

1 Min Read

ஜெய்ப்பூர், மார்ச் 8- நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தில் கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். அவ்வகையில், ராஜஸ் தானில் நேற்று (7-4-2024) பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப் படும். இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும். அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவதை தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றப்படும். விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *