கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு

1 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

மானமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் “மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா” என நடைபெற்று வருகின்ற தொடர் விழா நிகழ்ச்சிகளின் 50ஆம் நிகழ்ச்சி “சூரியச் சுடர் – 50, நெஞ்சுக்கு நீதி வழி! திராவிடமே ஒன்றியத்தின் ஒளி!!” என்னும் தலைப்பில் நேற்று (6.3.2024) நடைபெற்றது. நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்த தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் நிறைவாக சிறப்புரையாற்றினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு, மேனாள் நீதிபதி கே.என். பாஷா மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் உரையாற்றினர். மேனாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ப. ரங்கநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மைதானம் நிரம்ப மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். (பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானம், கார்த்திகேயன் சாலை, பெரியார் நகர், சென்னை – 82)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *