கருநாடக மாநிலம் பள்ளி பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் குறித்த பாடம் மீண்டும் இடம் பெற்றது

viduthalai
1 Min Read

பெங்களூரு,மார்ச் 7- கருநாடக மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது அமைக்கப் பட்ட பாடநூல் மறுஆய்வுக் குழு, மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த புரட்சிகர எழுத்தாளர்கள் கிரிஷ் கர்னாட், பி.லங் கேஷ், தேவனூர் மகாதேவா, நாகேஷ் எக்டே ஆகியோரின் படைப்புகளையும், சீர் திருத்த வாதிகள் சாவித்திரிபாய் பூலே, தந்தை பெரியார் உள்ளிட்டோர் குறித்த பாடங்களையும் நீக்கியது.
இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், பள்ளி பாடத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம், கருநாடக மாநில பள்ளிக் கல்வி திட்டத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் 18 முக்கிய மாற் றங்களை கொண்டு வந்தது.

மேலும் பாடத்திட்டத்தில் மாற் றங்கள் கொண்டு வருவது தொடர்பாக பேராசிரியர் மஞ்சுநாத் தலைமையில் பாடநூல் மறுஆய்வுக் குழுவை காங்கிரஸ் அரசு அமைத்தது. இதன்படி அரசமைப்பு, பாலியல் உணர் திறன், குழந்தைகள் உரிமைகள், ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் மனப் பான்மை ஆகியவற்றை அடிப் படையாக கொண்டு இந்த குழு ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் தீவிர சீர்திருத்தவாதி களாக பார்க்கப்படும் சாவித்திரிபாய் பூலே, தந்தை பெரியார் ஆகியோரின் பாடங்களை மீண்டும் சேர்க்க கருநாடக கல்வித்துறைக்கு ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
குறிப்பாக தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமூகப் பணிகள் குறித்த பாடத்தை 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையின் அடிப்படை யில் 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் குறித்த பாடத்தை கருநாடக கல்வித்துறை சேர்க்க இருக்கிறது. எதிர் வரும் கல்வி ஆண்டில் இந்த பாடங்கள் பள்ளிப் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *