தமிழ்நாட்டை பின்பற்றி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

1 Min Read

புதுடில்லி, மார்ச் 5- டில்லி அரசின் 2024-25ஆ-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சட்டப் பேரவையில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதியமைச் சர் அதிஷி தாக்கல் செய் தார்.
அவர் தனது நிதிநிலை அறிக்கை உரையில் கூறும்போது, “டில்லியில் முக்கிய மந்திரி மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்படி டில்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந் தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக வரும் நிதி யாண்டில் நிதிநிலை அறிக்கையில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்படுகிறது” என்றார். இந்தத் திட்டத் தில் பலனடைய பெண் கள் 18 வயதுக்கு மேற்பட் டவர்களாகவும் டில்லி வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும்.
வருமான வரி செலுத்துபவராக இருக்க கூடாது. வேறு ஏதேனும் ஒரு திட்டத்தில் ஓய்வூதி யம் பெற்றாலோ அல்லது அரசு ஊழியர்களாக இருந் தாலோ இத்திட்டத்தின் பலன்களை பெற முடி யாது. அமைச்சர் அதிஷி தனது நிதிநிலை அறிக்கை உரையில், ‘ராம ராஜ்ஜியம்’ என்ற கனவை நன வாக்க அரசு முயன்று வருவதாக குறிப்பிட்டார். மொத்தம் ரூ.76,000 கோடி செலவில் டில்லி நிதிநிலை அறிககை நேற்று (4.3.2024) தாக்கல் செய்யப்பட்டது. இது டில்லியில் ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த 10 ஆ-வது பட்ஜெட் ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *