அவையில் பேசவோ வாக்களிக்கவோ லஞ்சம் வாங்கும் எம்பிகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

viduthalai
2 Min Read

புதுடில்லி, மார்ச் 5- சட்டமன் றம் மற்றும் நாடாளுமன் றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர் பான வழக்கு விசாரணை யில் இருந்து நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப் பினர்களுக்கு விலக்கு கிடையாது என உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையி லான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் வாங் குவது, பொது வாழ்க்கை யில் நேர்மையை சீர் குலைப்பதாகும். லஞ்சம் நாடாளுமன்ற சிறப்புரி மைகளால் பாதுகாக்கப் படவில்லை என்றும், 1998இல் அய்ந்து நீதிபதி கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் அம்சம் அரச மைப்பின் 105 மற்றும் 194ஆவது பிரிவுக்கு முர ணானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

1993ஆம் ஆண்டு பி.வி.நரசிம்ம ராவ் தலை மையிலான கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க லஞ்சம் பெற்றதாக ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) தலைவர் சிபு சோரன் உள்ளிட்ட 5 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மீது குற்றம்சாட் டப்பட்டது. இது தொடர் பாக சி.பி.அய். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. ஆனால் இந்த வழக்கை உச்ச நீதி மன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு ரத்து செய்தது.

அதாவது, நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள் சபைக்குள் பேசுவதற்கும், வாக்களிப் பதற்கும் எதிராக குற்றவி யல் விசாரணையிலிருந்து அவர்களுக்கு விலக்கு இருப்பதாகவும், சட்டப் பிரிவு 105(2) மற்றும் 194(2) ஆகியவை அவர்க ளுக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பதாகவும் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
இந்த உத்தரவு தனக் கும் பொருந்தும் என கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட் டமன்ற உறுப்பினருமான சிபு சோரனின் மருமகளு மான சீதா சோரன், 2019இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியது.

1998இல் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டது. இது அரசியல் நெறிமுறைகள் மீது குறிப்பிடத்தக்க தாக் கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பிரச்சினை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. முதலில் 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதன்பின் னர், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றது. விசா ரணை கடந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி நிறைவடைந்தது.

1998இல் வழங்கப் பட்ட தீர்ப்பை 25 ஆண்டு களுக்கு பிறகு மாற்றும் வகையில் இப்போது 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. பி.வி.நரசிம்மராவ் வழக் கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என் றும், லஞ்சம் வாங்கும் உறுப்பினர்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கக் கூடிய அந்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும் நீதி பதிகள் அறிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *