தற்கொலை செய்து கொள்வது எப்படி? கூகுளில் தேடிய இளைஞர் இண்டர்போல் அளித்த தகவலால் மீட்டது மும்பை காவல்துறை

Viduthalai
1 Min Read

மும்பை, அக்.1 மும்பை யின் மாலட் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு வேலையிழந்துள் ளார். தொடர்ந்து வேறு வேலைக்கு முயற்சி செய்து வந்த அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயின் பிணை செலவுகளுக்கு அவரால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. இந்த கார ணங்களால் விரக்தியடைந்த அந்த இளைஞர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக கூகுளில் தற் கொலை செய்து கொள்வது எப்படி என்று தேடியுள்ளார். 

இந்த நிலையில் கூகுளை கண்காணிக்கும் இண்டர் போல் அதிகாரிகள், இது குறித்து மும்பை காவல் துறையினருக்கு கடந்த 26.9.2023 அன்று மதியம் மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்தனர். அந்த நபர் தனது இணையத் தேடலின் போது பயன்படுத்திய அலைபேசி எண்ணையும் பகிர்ந்தனர். இந்த தகவலின் அடிப்படையில் குற்றப் பிரிவு காவலர்கள் இரண்டு மணிநேரத்தில் அந்த நபரை கண்டுபிடித்து தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள அவருக்கு ஆலோசனை கொடுத்தனர். மேலும் அவருக்கு வேலை தேடித் தருவதாக உறுதியளித்து உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *