செங்கல்பட்டு மாவட்ட தொழில் முதலீட்டு மாநாடு ரூ.2,590 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

1 Min Read

மறைமலை நகர் நவ.22 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாடு சிங்கபெருமாள் கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. 

இந்த மாநாட்டிற்கு ஆட்சியர் ராகுல்நாத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், ரூ.2,590 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

அப்போது அமைச்சர் அன்ப ரசன் பேசியதாவது: வேளாண் மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்குவது குறு, சிறு தொழில் நிறுவனங்கள் .முதலமைச்சர் தலைமையில், ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடை பெற உள்ளது. தொழில் துறையில், இந்திய அளவில் 14 இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 3ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

முதலிடத்திற்கு கொண்டுவர, முதலமைச்சர் அவர்களால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆட் சிப் பொறுப்பு ஏற்றபின், புதிதாக 8 சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிதாக, 8 சிக்கோ தொழிற்பேட்டைகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

அது மட்டுமின்றி, 164 குறு, சிறு நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, 9,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. 

நாட்டிலேயே முதல் முறையாக, தமிழ் நாட்டில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் துறை வணிக ஆணையர் நிர்மல்ராஜ், மாவட்ட தொழில் மய்ய பொது மேலாளர் வித்யா, செங்கல்பட்டு தி.மு.க., -சட்டமன்ற உறுப்பினர், வரலட்சுமி செய்யூர் வி.சி., – பாபு உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *