அக்டோபர் 16-ஆம்தேதி சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டுவிழா

Viduthalai
1 Min Read

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்கூட்டத்தில் முடிவு! 

அரசியல்

தூத்துக்குடி, அக். 1- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 29. 9.2023 அன்று மாலை ஆறுமணிக்கு  மாவட்டத் தலைவர் மு.முனிய சாமி தலைமையில் நடைபெற் றது. 

கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா.குணசேக ரன்கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்.

கழக காப்பாளர் சு.காசி, மாவட்டத்துணைத்தலைவர் இரா.ஆழ்வார், மாவட்டச் செய லாளர் கோ.முருகன், விளாத்தி குளம் ஒன்றியத்தலைவர் பால முருகன், ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்.

நிறைவாக கழக காப்பாளர் மா.பால்இராசேந்திரன் சேரன் மாதேவி குருகுலப்போராட்ட நூற்றாண்டுவிழாவின் சிறப்பு களை விளக்கி உரையாற்றினார்.

அக்டோபர் 16 ஆம் தேதி சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா விற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும்,

பிஜேபி அரசின் குலத் தொழில் கல்விதிட்டத்தின் ஆபத்தினை விளக்கி பரப்புரை பயணம் மேற்கொண்டு தூத்துக் குடி வருகைதரும் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப் பான வரவேற்பு அளிப்பதுடன், கூட்டத்தை  எழுச்சியோடு நடத் துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கலந்துரையாடல்  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இறுதியில் போஸ் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *