அக்டோபர் 16-ஆம்தேதி சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டுவிழா

1 Min Read

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்கூட்டத்தில் முடிவு! 

அரசியல்

தூத்துக்குடி, அக். 1- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 29. 9.2023 அன்று மாலை ஆறுமணிக்கு  மாவட்டத் தலைவர் மு.முனிய சாமி தலைமையில் நடைபெற் றது. 

கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா.குணசேக ரன்கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்.

கழக காப்பாளர் சு.காசி, மாவட்டத்துணைத்தலைவர் இரா.ஆழ்வார், மாவட்டச் செய லாளர் கோ.முருகன், விளாத்தி குளம் ஒன்றியத்தலைவர் பால முருகன், ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்.

நிறைவாக கழக காப்பாளர் மா.பால்இராசேந்திரன் சேரன் மாதேவி குருகுலப்போராட்ட நூற்றாண்டுவிழாவின் சிறப்பு களை விளக்கி உரையாற்றினார்.

அக்டோபர் 16 ஆம் தேதி சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா விற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும்,

பிஜேபி அரசின் குலத் தொழில் கல்விதிட்டத்தின் ஆபத்தினை விளக்கி பரப்புரை பயணம் மேற்கொண்டு தூத்துக் குடி வருகைதரும் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப் பான வரவேற்பு அளிப்பதுடன், கூட்டத்தை  எழுச்சியோடு நடத் துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கலந்துரையாடல்  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இறுதியில் போஸ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *