குஜராத்தில் 29 ஆண்டுகளாக புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டவில்லையாம்!

1 Min Read

பா.ஜ.க. அரசு ஒப்புதல்

அகமதாபாத், மார்ச் 3 பாஜக ஆளும் குஜராத் மாநிலத் தில் தற்போது நிதிநிலை சட்டமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிய மருத்துவ கல்லூரிகள் குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த பதிலில், “குஜராத்தில் ஆறு அரசு மருத்துவக் கல் லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. 1995-ஆம் ஆண்டி லிருந்து புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை. 2023-ஆம் ஆண்டு மட்டும் 4 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
அதாவது குஜராத்தில் 29 ஆண்டு களாக புதிய அரசு மருத்துவக்கல்லூரி கள் கட்டவில்லை என பாஜக அரசு ஒப் புக்கொண்டுள்ளது. குஜராத்தில் 1871- ஆம் ஆண்டு அகமதாபாத்தில் முதல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்ட நிலையில், இறுதியாக காங்கிரஸ் ஆட் சிக்காலத்தில் 1995-ஆம் ஆண்டு பாவ்நக ரில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட் டுள்ளது. அதன்பின்னர் எந்த மருத்து வக்கல்லூரியும் அங்கு அமைக்கப்பட வில்லை. குஜராத் மாநிலத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் முறையாக பாஜக ஆட்சி யமைத்தது. அதிலிருந்து தற்போதுவரை அங்கு பாஜக ஆட்சியே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *