கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

1.3.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* மக்களவை தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும் தலா இரண்டு தொகுதிகள். திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிவு.
* பிரதமர். – அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்த திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.
* தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
* மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், இந்தியாவி லேயே முன்னணி மாநிலமாக விளங்கிடும் தமிழ்நாடு, தொடர்ச்சியாக, இந்நிலையை உறுதிப்படுத்தி வருகிறது. மின்னணுவியல் ஏற்றுமதி தற்போது 7.37 பில்லியன் டாலரை அடைந்துள்ளது. மார்ச்சுக்குள் 9 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய சாதனை படைக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்திடுவார்கள், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா எச்சரிக்கை
தி டெலிகிராப்:
* இமாச்சலப் பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடுகிறது மாநில அமைச்சரவைக் கூட்டம். மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த 6 காங். சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை இமாச்சல் அமைச்சரவை கூடு கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் ஆபரேஷன் தாமரையை முறியடிப்பதில் பிரியங்கா காந்தி முக்கிய பங்கு வகித்தார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
தேர்தலுக்கு முன் சுரங்க வழக்கில் தனக்கு சிபிஅய் அழைப்பாணை அனுப்பியதற்கு பதிலளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் – அவர்கள் (சிபிஅய்) பாஜக வின் அணி போல செயல்படுவதாக தெரிவித்தார்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *