நீதிபதியாக திருடன்

viduthalai
1 Min Read

தானி ராம் மிட்டல் ஒரு பிரபல திருடன். அதே நேரத்தில் வழக்குரைஞர். டில்லி, அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்களை இவன் திருடி இருக்கிறானாம்.
பொய்யான ஆவணங்களை தயாரித்து ஜஜ்ஜார் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியை இரண்டு மாத விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டு, தானே நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டு, 2000 குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளான்.
கடைசியில் உண்மையைக் கண்டுபிடித்து அவனை கைது செய்ய வந்த போது, காணாமல் மறைந்து விட்டான். அவனால் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை திரும்ப சிறையில் அடைக்க அரசு தேடிக் கொண்டிருக்கிறது.
போலியாக அரசாங்க அலுவலகங்கள் நடத்துவது மட்டுமல்ல, ஒரு திருடன் நீதிபதியாகவே கூட பணியாற்ற முடியும் – எவ்வளவு திறமையான நிர்வாகம்?!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *