எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பு!

0 Min Read

சென்னை,பிப்.28- எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களுக்கு, மீண்டும் பணி வழங்கியதற்கு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,எம்.ஆர்.பி கோவிட் செவிலியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேஷ், மாநில நிர்வாகி பிரபு ஆகியோர் நேரில் நேற்று (27.02.2024) சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
வரும் 11.03.2024 திங்கள் மாலை 4 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அரசுக்கு நன்றி பாராட்டும் விழா நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசனும் கலந்து கொள்கிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *