சென்னை, பிப். 28- நாடாளு மன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அர சியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப் பெருந்தகையும் சட்டப் பேரவை காங்கிரஸ் குழு தலைவராக எஸ்.ராஜேஷ் குமாரையும் கடந்த 17ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் தலைவர் கு.செல் வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன் ஆகியோரும், பொதுச்செயலாளர்களாக
டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத் தையா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

Leave a Comment