‘எது நமக்கான அரசியல்’ – பிரச்சாரப் பொதுக்கூட்டம் “இந்தியா” கூட்டணிக்கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்பு

1 Min Read

கீழப்பாவூர், பிப். 27- தென்காசி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், கீழப்பாவூரில் 25.2.2024 அன்று ‘எது நமக்கான அரசியல்’ என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமை வகித்தார். ராமச் சந்திரன், பால்துரை, பொன்ராஜ்,ராமசாமி, செந்தில்குமார், முரு கன், அன்பழகன், சிவபிரகாசம் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் குருதி, விழி மற்றும் உடற்கொடை கழக நிறுவனர் அய்.ராமச்சந்திரன் வரவேற்றார்.
காப்பாளர் டேவிட் செல்லத் துரை தொடக்கவுரை ஆற்றினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெய பாலன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ். ராஜன், மாவட்ட திமுக மருத்து வர் அணி அமைப்பாளர் டாக் டர் அன்பரசன், துணை அமைப் பாளர் டாக்டர் கவுதமி தமிழர சன், மருத்துவர் மானவீரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கலந்து கொண்டு எது நமக்கான அரசியல் என்ற தலைப்பில் பேசினார்.

கலந்து கொண்டோர்
கூட்டத்தில் கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.அறிவழகன், மேனாள் துணைத்தலைவர் தங்கச்சாமி, பேரூராட்சி கவுன் சிலர் பொன்செல்வன், சமூகநீதி பேரவை ஒருங்கிணைப்பாளர் பிஎஸ்என்எல் ஆறுமுகம், கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார், வேலாயுதம், அருணாசலம், மதி யழகன், ராமசாமி, அருண், இல.அறிவழகன், கருப்பசாமி, ஜெகசெல்வம், தமிழ்செல்வன், அன்பரசு, சுரேஷ், இளையபெரு மாள், தங்கராஜ், தங்கேஸ்வரன், சேகர், கவுன்சிலர் இசக்கி, முரு கன், இசக்கிமணி, எழில்துரை, சுடர்ராஜ், மணி, விஜயன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை குசலவராஜன், சிவா, புதியபழனி, பொன்.விஜய்ஆனந்த், கனிச்செல்வன், ராஜசங்கர், அழகரசு, அசோக், அமுதன், இனியன், தொல்காப் பியன் ஆகியோர் ஒருங்கிணைத் தனர். முடிவில் நாராயணன் (எ) குட்டி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *