சிதம்பரம் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நமசிவாயம் படத்திறப்பு

1 Min Read

சென்னை, பிப்.25- 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்த்தில் கலந்துகொண்டு 9 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்ற வி.நமசிவாயம் (மேனாள் நகர் மன்ற உறுப்பினர்) அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு 18.2.2024 ஞாயிறன்று நண்பகல் 4 மணிக்க சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை கீழவீதியிலுள்ள அன் னாரின் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார். மற்றும் மாவட்ட கழக செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், மாவட்ட ப.க. செயலர் செங்குட்டுவன், பேராசிரியர் த.இராசவன்னியன், மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர் அ.முருகேசன் ஆகியோர் உரையாற்றினார்.
தி.மு.க. பொறியாளர் அணி மாநில செயலாளருமான புவனகிரி மேனாள் சட்டமன்ற உறுப்பினரு மான துரை.கி.சரவணன் இறுதி யாக மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தார்.இறுதியாக, நமசி வாயம் அவர்களின் மகன் குமார் நன்றி கூறினார். மேனாள் அமைச் சர் வி.வி.சுவாமிநாதன் அனுப்பிய இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *